நாவூரும் சுவையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு..!! இப்படி செய்து பாருங்க..!!

பொதுவாகவே மனித பிறவிக்கு மாத்திரமே உணவை சமைத்து சாப்பிடும் வரம் கிடைக்கின்றது. உணவு என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று தான்.

அதிலும் அசைவ உணவு என்றால் சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அசைவத்தில் கோழி,மீன் ,இறால், நண்டு, என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.

ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதில் பெரும்பாலும் கடல் உணவு பிரியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அதிலும் நண்டு குழம்பு என்றால் பலருக்கும் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.

நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட எவ்வளவு சிரமப்பட்டாலும் அதன் உள்ளே இருக்கும் சுவையான சதையை சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்தமான காணப்படுகின்றது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில்  காரசாரமான நண்டு மசாலா குழம்பு எவ்வாறு எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நண்டு மாரினேட் செய்ய தேவையான பொருட்கள்

நண்டு – 10-15

மஞ்சள் – 1/2  தே.கரண்டி

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

உப்பு – சிறிதளவு

குழம்பு தயாரிக்க தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 1

துருவிய தேங்காய் – 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

கொத்தமல்லி தூள் – 1 தே.கரண்டி

கரம் மசாலா தூள் – 2 தே.கரண்டி

கருப்பு மிளகு – 2 தே.கரண்டி

பெருஞ்சீரகம் – 1 தே.கரண்டி

எண்ணெய் – 3 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் நண்டுகளை சுத்தம் செய்து சமைப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு  சேர்த்து நன்றாக  கலந்து 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை பாத்திரத்தை மூடி ஊறவைக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில்  துருவிய தேங்காய், கருப்பு மிளகு மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றையும் போட்டு போஸ்ட் போன்ற பதத்தில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வத்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்மை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.  எண்ணெய் பிரிந்து வந்ததும்  உப்பு கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் மாரினேட் செய்த நண்டு துண்டுகளை அதனுடன் சேர்த்து மசாலா குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.

குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான நண்டு மசாலா குழம்பு தயார்.

Read Previous

கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தணுமா?.. இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்..!!

Read Next

வெறும் வயிற்றில் வல்லாரை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular