இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் வருங்கால மனைவியும், உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான பிரியா சரோஜ், ஒரு விவசாயியைப் போலவே வயலில் இறங்கி நெல் நாற்று நடவில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜான்பூரின் மச்லிஷஹார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யான பிரியா சரோஜ், ஞாயிற்றுக்கிழமை தனது கிராமத்திற்குச் சென்று, விவசாயிகளுடன் நடவுப் பணிகளில் ஈடுபட்டார்.




