மகாராஷ்டிரா: நவி மும்பையில் பள்ளி மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசிய 35 வயதான ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடங்களில் சில காலமாக ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அந்த மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசியுள்ளார். இதுகுறித்து மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.




