கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தம்பதி பிரவீன் – ஷில்பா (27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷிப்லாவும், பிரவீனும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருமணத்தின்போது ரூ.50 லட்சம் வரதட்சணயாக ஷில்பா குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரவீன் கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனால், கர்ப்பமாக இருந்த ஷில்பா நேற்று (ஆக.28) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.




