சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்த தீபா என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சிகர பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு தீபா நடந்து செல்லும்போது, வடிகாலில் தவறி விழுந்துள்ளார். இதில் தீபாவின் நெற்றியில் காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக மரணமடைந்துள்ளார். அரை மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில், 1 மணி அளவில் தீபாவின் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




