தெலங்கானா: மகபூப்நகர் மாவட்டத்தில் தாயை பலாத்காரம் செய்ய முயன்ற மகனை, தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மச்சாரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (28) என்ற இளைஞர் வீட்டில் குடிபோதையில் இருந்தபோது, தனது தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதைக்கண்டு ஆத்திரமடைந்த ஸ்ரீதரின் தந்தை நாகய்யா கோபமடைந்து அவரை தடியால் தாக்கினார். பலத்த காயமடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.





