கேரளா: சரத் (38) என்பவருக்கு அபர்ணா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சரத்துக்கு லாட்டரியில் மெகா பம்பர் பரிசாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ள போதிலும் அமைதியான புன்னகையை சரத் வெளிப்படுத்துகிறார். அவர் கூறும்போது, “எந்த விதமான அவசர முடிவும் எடுக்க மாட்டேன். என் குடும்பத்தினருடன் அமர்ந்து பரிசு பணத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பதை முடிவு செய்வேன்” என்றார்.




