கோவில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி..??

Oplus_131072

கோவில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி ………..

தேவையான பொருட்கள்……

1கப் பச்சரிசி
1/2கப் பாசிப்பருப்பு
3கப் தண்ணீர்
1 1/2கப் நாட்டு சக்கரை
3டேபிள்ஸ்பூன் நெய்
1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
12உடைத்த முந்திரி
10காய்ந்த திராட்சை
1டேபிள்ஸ்பூன் சாரை பருப்பு

செய்முறை ………

1/2 கப் பாசிப்பருப்*பு கடாயில் சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.1கப் பச்சரிசியை எடுத்து வைக்கவும். இரண்டையும் சேர்த்து கழுவி வைக்கவும்.1 1/2 கப் நாட்டுச்சக்கரை எடுத்து வைக்கவும்.12 உடைத்த முந்திரி,10 காய்ந்த திராட்சை எடுத்து வைக்கவும்.

கழுவி வைத்த அரிசி பாசிப்*பருப்பு இரண்டையும் 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வேகவிட்டு, நன்கு குழைய வேகவிடவும். நாட்டுச் சர்க்கரையை ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அடு*ப்பில் வைத்து பாகு காய்ச்சி வைக்கவும்.

நாட்டுச் சர்க்கரை பாகுவை வடித்து குக்கரில் சேர்த்து விடவும்.நன்கு கலக்கி ஒரு கிண்ணத்தில் எடு*த்து வைக்கவும். 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, 1 டீஸ்பூன் சாரைப்பருப்பு, எடு*த்து வைத்த முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்த்து விடவும்.

சுவையான நாட்டு சர்க்கரை பொங்கல் ரெடி.

Read Previous

காலையில் வெறும் 3 முட்டை மட்டும் சாப்பிட்டால் நடக்கும் அற்புதம்..!!

Read Next

பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular