தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ல் கொண்டாடப்பட உள்ளது. திருப்பூரில் பனியன் உற்பத்தி, ஏற்றுமதி தொழில் மற்றும் அதனைச் சார்ந்த துணை நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு இவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில் நிலையம், பேருந்து நிலையம் கூட்டமாக காட்சியளிக்கிறது.




