Oplus_16908288
ஆந்தரப் பிரதேச மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் பள்ளி சிறுமியுடன் உல்லாசமாக இருக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்கிநாடா மாவட்டம் அருகே ஆள் இல்லாத பகுதிக்கு பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற நிர்வாகி, உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு சென்ற இளைஞர் ஒருவர், அவரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளார். மேலும், அப்பகுதி மக்கள் நிர்வாகியை தாக்கியதாக கூறப்படுகிறது.



