தமிழ்நாட்டில் 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி உயர்வு, பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி சந்தீப் மிட்டல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளதோடு, சைபர் கிரைம் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்மண்டல ஐஜியான பிரேம் ஆனந்த் சின்கா, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




