சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரை தாக்கி ஆடையை கிழித்த கும்பலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் காவலர், “தன்னை விட்டுவிடுமாறு” கெஞ்சிய நிலையிலும் போராட்டக்காரர்கள் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.




