தர்மபுரி: கள்ளக்காதல் தகராறில் மனைவியின் தங்கையை கல்லால் அடித்து கொலை செய்து புதைத்த மாமனை போலீசார் கைது செய்தனர். அனுமந்தன் என்பவருக்கு அவரது மனைவியின் தங்கை ராஜேஸ்வரியுடன் பழக்கம் இருந்துள்ளது. ராஜேஸ்வரியின் கணவர் பிரபு பெங்களூரில் வேலை செய்யும் நிலையில், ஊருக்கு வருவதால் பழகுவதை குறைத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், அனுமந்தன் ராஜேஸ்வரியை கல்லால் தாக்கி கொலை செய்து, கட்டிட கழிவுகளால் மூடி புதைத்தது தெரியவந்துள்ளது.




