உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடியை பெண் வீட்டார் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது அர்மான் (24) என்ற இளைஞர், காஜல் சைனி (18) என்ற தனது காதலியைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் வீட்டார், ஆத்திரத்தில் இருவரையும் சரமாரியாக தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களது உடல்களை ககன் நதிக்கரையில் புதைத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இது ஆணவக் கொலையாக இருக்கலாம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.




