ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி ஒருவர், சக கட்சி நிர்வாகிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் இருவருக்கும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக MLA சரவணன் பாதுகாப்பு அரணாக விளங்குவதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது கட்சி தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.




