கோயில் திருவிழாவில் ஆபாச நடனமா? நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
கோயில் திருவிழாக்களில் கரகாட்டம் என்ற பெயரில் ஆபாச உடைகள் அணிந்து நடனம் ஆடுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரியலூர் மாவட்டம் பாப்பாத்தம்மன் கோயில் திருவிழா தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நீதிபதி லட்சுமி நாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




