இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு முதலீடு மற்றும் ஏற்றுமதியை மையமாக கொண்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலிருந்து முத்துக்கள், ரசாயன பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், தொழில்நுட்ப ரீதியாகவும் இரு நாடுகளின் உறவு வலுப்படும். ஆசியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தம் இந்திய தொழில்துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




