மார்ச் 9ல் திருச்சியில் 10 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் திமுக மாபெரும் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனை மாநாடாக இது அமையும் என்றும், அனைத்து நிர்வாகிகளும் முழுமையாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




