காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானும் இந்தியாவும் பல முடிவுகளை எடுத்து எல்லைப் பகுதிகளில் ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. போர் என்று ஒன்று வந்தால் இந்தியா தனது கையை ஓங்கும் என்று உலக நாடுகள் அனைத்துக்கும் தெரியும். பாகிஸ்தானை விட படையை பலத்திலும் தொழில்நுட்பத்திலும் இந்தியா பல மடங்கு முன்னிலையில் இருக்கிறது.
மேலும் பாகிஸ்தானின் தீவிரவாதிகளின் சில நடவடிக்கைகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்து விடுமோ என்று அந்நாட்டு ராணுவ தளபதிகள் பயந்து ராஜினாமா செய்து நாட்டை விட்டு சென்று வருகின்றனர். இவ்வளவு ஏன் காஷ்மீர் பாகிஸ்தான் உடையது என்று பஹல்காம் தாக்குதல் நடந்த அன்று கூறிய ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனிர் நாட்டை விட்டு ஓடி எங்கோ ஒளிந்திருக்கும் நிலையில் மற்ற தளபதிகள் ராஜினாமா செய்து வருகின்றனர்.
மேலும் லெப்டினன்ட் ஜெனரல் உமர் அகமத்தின் கடிதம் இன்டர்நெட்டில் வெளியாகி நிட்டிசன்களால் வைரலாகப்பட்டு வருகிறது. மேலும் இதன் தொடர்பாக பாகிஸ்தான் அரசு எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. போர் வருவதற்கு முன்பாகவே பயந்து ராஜினாமா செய்யும் பாகிஸ்தானின் ராணுவ படைகளை பார்த்து மற்ற நாடுகள் வேடிக்கை அடைகின்றது.




