இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 67,800 ஆண்டுகள் பழமையான மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர். சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பறவைகளின் தலைகள் மற்றும் விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட மனித உருவங்களும் ஓவியங்களில் காணப்படுகின்றன.




