வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் உடல் சூடு அதிகரிக்கும் அது மட்டுமல்லாமல் உடலில் நீர் வறட்சி ஏற்படும் பொழுது உடல் சூடு அதிகமாகும் மேலும் உடல் சூட்டை குறைப்பதற்கான வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டிய எளிய முறைகள்..
முதலில் தேங்காய் எண்ணெயில் மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும் அதை மிதமான வெப்ப நிலையில் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு வேப்பிலையை சேர்த்து பொரிய விட வேண்டும், அதன் பின் இறக்கி வைத்து அதனுடன் சிறிது வெந்தயம் சேர்த்து மூடி விட வேண்டும் இந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும் மற்றும் வெப்பம் சார்ந்த நோய்கள் வராது, மேலும் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது இளநீர் நீர் பானங்கள் இவற்றை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள வெப்பங்கள் குறைந்து சராசரியான வெப்ப நிலைக்கு உடலை மாற்றும் மேலும் கற்றாழையில் உள்ள ஜெல்லியை சாப்பிடும் பொழுது உடலில் வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்..!!




