“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ;
தன் பிள்ளைத் தானே வளரும்.”
பெரும்பாலானவர்கள் ஊரில் உள்ள வேறு குழந்தைகளை ஊட்டி வளர்த்தால், தன்னுடையக் குழந்தை தானே வளரும் என நினைக்கிறார்கள்.
உண்மையான விளக்கம் :-
ஊரார் அதாவது மாமனார்,மாமியாரின் பிள்ளையாகிய தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது, நல்ல பணிவிடை செய்து, மனம் நோகாமல் அவள் ஆசைப்பட்ட உணவுடன் பாலும், பழங்களும் கொடுத்து ஊட்டி வளர்த்தால் …
அவளது வயிற்றில் இருக்கும் தன் குழந்தை தானே வளரும் என்பதே இப்பழமொழியின் உண்மையான பொருள் .



