டெல்லியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தீரஜ் கான்சல் (25) என்ற மாணவர் ஹீலியம் வாய்வை சுவாசித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ள அந்த இளைஞர் அதில், ‘“இது என் தேர்வு மட்டும், யாரையும் குறை சொல்ல வேண்டாம். என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை” என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




