
கோயம்புத்தூரில் உள்ள Maxwell charitable trust என்ற தொண்டு நிறுவனமானது தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
இந்த தொண்டு நிறுவனமானது பல்வேறு நலத்திட்ட உதவிகளை பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகளின் காப்பகங்கள் என பல இடங்கள் சென்று தங்களால் முடிந்த நிதிகளையும் பொருள்களையும் செய்து வருகின்றது, இதனை தொடர்ந்து கேரள மாநிலம் வய நாட்டில் நடந்த நிலச்சரிவினை கருத்தில் கொண்டு கிட்டத்தட்ட 2.5 லட்சம் பொருள் மற்றும் பண உதவிகளை சுற்றுப்பகுதியில் உள்ள மக்களின் உதவிகளோடு மேக்ஸ்வெல் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து வயநாடு நோக்கி சென்று, கேரள வயநாடு ஆட்சியர் வனிதா மேடம் அவர்கள் முன்னிலையில் தங்களது பங்களிப்பை தந்து வந்துள்ளது Maxwell charitable trust managing trustee முருகன் உடன் இருந்தார்..!!