சர்க்கரை நோயிலிருந்து இதய நோய் வரை நம்மை காக்கும் கறிவேப்பிலை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் கருவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் இதை இப்படி சாப்பிட்டால் இந்த நோய் தீரும் எனவும் கூறி வந்தார்கள். இன்றளவும் கூட வீட்டில் உள்ள பெரியோர்கள் கருவேப்பிலையை பொடி செய்து வைத்து அதை பல மருத்துவங்களுக்கு பயன்படுத்த சொல்வார்கள். இந்நிலையில் கருவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த காலகட்டத்தில் உள்ள பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். அதுமட்டுமின்றி கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமணி தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து நல்ல பாதுகாப்பு தரும் எனவும் கூறப்படுகிறது.




