தமிழகத்தில் அடுத்தடுத்த இரண்டு மேயர்கள் ராஜினாமா..? அதிர வைக்கும் தகவல்..!! அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்..!!

தமிழகத்தில் அடுத்தடுத்து இரண்டு மேயர்கள் ராஜினாமா செய்துள்ளனர் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் இடம் திமுக காங்கிரஸ் கவுன்சிலர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை கட்சி தலைமையிடம் அனுப்பி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நெல்லை மாநகராட்சியில் திமுகவை சார்ந்த சரவணன் மேயராக பணிபுரிந்து வருகிறார் இவர் நெல்லை மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்றதிலிருந்து இருவருக்கும் கவுன்சிலருக்கும் இடையில் கருத்து வேறுபாடு மற்றும் மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது, இதற்கிடையே ஏற்பட்டு வந்த மோதலால் பலமுறை மாநகராட்சி கூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தது. மக்கள் நலத்திட்ட பணிகள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் எழும்பியது.

இதற்கிடையே கமிஷனரிடம் திமுகவை சார்ந்த கவுன்சிலர் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தினை வழங்கியுள்ளார். கவுன்சிலர் கிடையே இந்த இடையே மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மாநகராட்சிக்கு நேரில் சென்று மேயர் சரவணன் மற்றும் கவுன்சிலர்களை அழைத்து பேசி அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இருப்பினும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நின்றபாடு இல்லை. தொடர் கதையாய் தொடர்ந்தது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பத்து கவுன்சிலர்களை தவிர மீதமுள்ள 55 கவுன்சிலர்கள் மோதலில் ஈடுபட்டு அவரை புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் கே என் நேரு மேயர் சரவணன் நேரில் அழைத்து மாநகராட்சி பிரச்சனை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். தற்பொழுது மேயர் சரவணன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கோவை மேயர் கல்பனாவின் கணவரும் திமுக பொறுப்பு குழு உறுப்பினராகவும், சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. கோவை மேயராக கல்பனா பதவியேற்ற முதல் அவர் மீது பல்வேறு புகார்கள் இருந்து வந்தது மற்றும் நேரடியாகவே மேயருக்கு அண்மை காலமாக திமுக கவுன்சிலர்கள் தங்களது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் கோவை மேயர் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உ.பி விபத்து – முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணம் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular