நோய் தீர்க்கும் குப்பைமேனி மூலிகையைப் பற்றி நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

குழந்தைகளுக்கு இருமல் சளி அதிகம் இருக்கும் பட்சத்தில் குப்பைமேனி மூலிகையை தாய்ப்பாலோடு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது சளி அறுந்து விடும்…

குப்பைமேனி செடியினை எங்கும் காணலாம் இது சுயமாக வளரும் இச்செடியனை மாந்திரீக மூலகையாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர் இதன் இலை வட்டமாக இருக்கும் இது பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி மிக்கது, குப்பைமேனி மூலிகை மலம் கழிக்கும் ஆசனவாயில் தோன்றும் பௌத்திரம் என்னும் நோயை குணப்படுத்துகிறது, குப்பைமேனி இலைகளை இடித்து சாறு பிழிந்து சிறிது சுண்ணாம்புடன் கலந்து மேலுக்கு தடவ விஷக்கடிகள் குணமாகும் குப்பைமேனி சாற்றுடன் முக்கரைச் சாறு முடக்கத்தான் சாறு இவைகளில் ஒரு அவுன்ஸ் எடுத்து சிற்றாமணக்கு எண்ணெயில் ஒரு ஹவுஸ் சேர்த்து காய்ச்சி வடித்தடுத்து காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு கொடுக்க மாந்த வலிப்பு குணமாகும், குப்பைமேனி வேரை துப்புரவு செய்து உலர்த்தி நீரிட்டு காய்ச்சி சுண்ட வைக்க வேண்டும் இ குடிநீரை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் கொக்கி புழுக்கள் யாவும் இறந்துவிடும் குப்பைமேனிகளுடன் மஞ்சளையும் சிறிதளவு உப்பையும் வைத்து அரைத்து சிரங்கின் மீது பூசி வர பின்னர் வெந்நீரில் குளித்து வந்தால் சிரங்கு நீங்கும்..!!

Read Previous

முருங்கைக்காய் முருங்கைக் கீரை மற்றும் முருங்கை பூவின் மருத்துவ குணத்தை தெரிந்து கொள்வோம்..!!

Read Next

மூலிகை உணவில் மாம்பழம் ஒரு ஞானப்பழமாக இருக்கிறது, மாம்பழத்திற்காக பிள்ளையார் முருகனும் போட்டி போட நேர்ந்த கதை தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular