
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் பதற்றம் நிலவிவரும் காரணத்தினால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நிறுத்தப்பட்டு துபாயில் நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்தது. நேற்று இந்த தகவல் வெளிவந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்தியா இந்தியன் பிரீமியர் லீக் நிறுத்தி வைப்பதாக கூறியது. மேலும் ஒரு வாரத்திற்கு பிறகு இந்த போட்டிகளை நடத்துவதாகவும் தெரிவித்தது.
பாகிஸ்தானின் போட்டிகள் துபாயில் நடக்கவிருந்த வேளையில் இந்தியாவும் போட்டிகளை நிறுத்தி இருப்பதனால் துபாய் பாகிஸ்தான் சூப்பர் லீகை நடத்த மாட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இதைப் பார்த்து நெடிஷன்கள் பாகிஸ்தானை கலாய்த்து வருகின்றனர். காரணம் ஐபிஎல் இல் இருக்கும் லாபம் பிஎஸ்எல்லில் இருக்காது.
அதனால் ஐபிஎல் துபாயில் நடைபெறுமா என்ற கேள்வியும் மக்களிடையே எழும்பியுள்ளது. இதற்கு துபாயும் இந்தியாவிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் இங்கிலாந்தும் ஐபிஎல்லை அங்கு நடத்த கோரி இந்திய கிரிக்கெட் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. வர்த்தகமானாலும் சரி விளையாட்டானாலும் சரி போரானாலும் சரி இந்தியாவின் கை ஓங்கியே இருக்கிறது.