பாகிஸ்தானில் இன்று (மே 10) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்தியா, பாகிஸ்தான் போர் தீவிரமடைந்து வரும் இந்த சூழலில் இயற்கையின் சீற்றமும் பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.




