
திருப்பத்தூர் மாவட்டம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (53). இவருக்கும் இரண்டாவது மனைவி தீபாவுக்கும் (35) இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு (பிப்.,27) இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தீபாவை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கணவர் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.