இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலளவில் நோய் தன்மை மற்றும் வலிகளை ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு வருகின்றனர், மூட்டு வலியால் பாதிக்கப்படும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர் ஒரு காலகட்டத்தில் முதியோர்களுக்கு மட்டுமே மூட்டு வலியில் இருந்த நிலையில் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி அதிகரித்து வருகிறது அதனால் இளம் வயதினர் முதல் முதியோர் வரை மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்…
மூட்டு வலி சரி செய்வதற்கு “ஆழித்தெழுந்த நோய் அனைத்தையும் தீருமே” என்னும் அகத்தியர் குணவடாக பாடல் உத்தாமாணியின் ஆற்றலை போற்றுகிறது, மேலும்
டெர்பினாய்டுஸ், ஃப்ளேவனாய்ட்ஸ் தானின் போன்ற வேதிப்பொருட்கள் இவற்றில் நிறைந்துள்ளது. இதன் இலைச் சாறுடன் சுக்கு பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து பசை போல செய்து வாத நோயால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களின் மேல் பற்று போட்டால் உடனடியாக மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி குறையும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், மேலும் இயற்கை முறையில் வைத்தியங்கள் மேற்கொள்ளும் பொழுது உடலில் நல்ல மாற்றமும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்..!!




