ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான் மீது இன்று (மார்ச்.2) இஸ்ரேல் படைகள் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி வருவதால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், லெபனான் மீது மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த போர் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




