தெலங்கானா மாநிலத்தில், திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தற்கொலை செய்ய தூண்டிய ரவுடி கைது செய்யப்பட்டார். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சுசீலா (28) என்ற பெண், மற்றொரு பெண்ணுடன் விவசாயப் பணிக்குச் சென்றார். அப்போது அங்கு வந்த ரவுடி தாராவத் வினய், அப்பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மனமுடைந்த அப்பெண், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.




