இதை ஒரு முறை செய்தால் போதும் ஒரே இரவில் பித்த வெடிப்பு மறையும்..!!

 

பலருக்கும் பாதத்தின் தோல் வறண்டு வெடிப்பு உண்டாகும். அதிக நேரம் தண்ணீரில் இருப்பவர்களுக்கும் இந்த பாத வெடிப்பு விரைவிலேயே வந்துவிடும். வெயில் காலங்களை விட மழைக்காலங்களில் பாத வெடிப்பு இருப்பவர்களுக்கு எரிச்சல் மற்றும் பாத வெடிப்பில் வலி போன்றவை ஏற்படும். பலரும் இதற்காக பார்லர் சென்று கால்களை பராமரித்து வருவதும் உண்டு. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினாலே போதும் முற்றிலும் குணமாகும்.

முறை : 1

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு வெந்நீரில் சிறிதளவு உப்பு எலுமிச்சை சாறு சேர்த்த அந்த தண்ணீரீல் கால்களை வைத்து வரவேண்டும். இவ்வாறு செய்வதால் கால்களில் உள்ள அழுக்குகள் வெளியேறும். மேலும் மருதாணி இலையுடன் மஞ்சள் தூள் சேர்த்து பாத வெடிப்பு இருக்கும் இடங்களில் பூசி வரலாம். மருதாணி குளிர்ச்சியை தருவதால் பாத வெடிப்பிற்கு மிகவும் நல்லது.

முறை : 2

வீட்டில் உபயோகிக்கும் பேஸ்ட்டுடன், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பாத வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வர நல்ல மாற்றத்தை காணலாம்.

Read Previous

ஆவாரம் பூ மருத்துவ குணங்கள்..!! வியக்க வைக்கும் தகவல்கள்..!!

Read Next

ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular