நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமாக காணப்படுகிறது. ஆனால் இப்பொழுது நிறைய பேருக்கு மாரடைப்பு பிரச்சனைகள் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி ஒரு நாளைக்கு சாதாரணமாக 150 நிமிடங்கள் மிதமான வேகத்தில் உடற்பயிற்சி செய்தாலோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்தாலோ மாரடைப்பு வராது என்று தெரியவந்துள்ளது.
மாடிப்படி ஏறுவது போன்றவற்றையும் உடற்பயிற்சியாக தான் கருதுகின்றோம். வேகமாகவோ அல்லது மிதமாகவும் மாடிப்படி ஏறுவதால் உடல் எடை குறையும். அதனால் மாரடைப்பு வரும் அபாயமும் கம்மியாகும். மாடிப்படிகளை ஏறும் பொழுது தசைகள் வலிமை பெறும். அது மட்டும் இல்லாமல் வயதாகும் போது உடலில் ஏற்படும் தளர்ச்சியை இது குறைக்கும்.
மேலும் மாடிப்படி ஏறுவதால் நமது உடம்பில் இருக்கும் கொழுப்புகள் குறைந்து சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகையால் அவ்வப்போது மாடிப்படிகளை ஏறி உடற்பயிற்சி செய்து மாரடைப்பு வரும் அபாயத்திலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.




