இப்போது பலருக்கும் இருந்து வரும் பிரச்சனை தான் தலையில் இருக்கும் பொடுகு. இதை எப்படி தீர்ப்பது என்று அனைவரும் குழம்பி போய் இருக்கும் வேலையில் இதற்கு ஒரு தீர்வு மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொடுகு தொல்லை ஆண் பெண் என இருவருக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம் நமது வாழ்க்கை முறைதான்.
பொடுகை தீர்த்து கட்ட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெரும் மக்களோ ஏராளம். நமது வாழ்க்கை முறையின் மாற்றம் உணவு மாற்றம் தூக்கமின்மை ஆகியவை தான் இந்த பொடுகு தொல்லைக்கு காரணமாக இருக்கிறது. இந்த பொடுகு பிரச்சனை அதிகமானால் முடி கொட்டுவதும் அதிகமாக ஏற்படும். பொடுகு தொல்லையில் இருந்து மீள நிறைய ஷாம்புகள் சீரம் ஆகியவை கடைகளில் விற்பனையாகும்.
ஆனால் இதில் இருக்கும் அதிகப்படியான ரசாயனங்கள் நமது தலைமுடியை பாதிப்படைய வைக்கும். ஆகையால் இதற்கு வீட்டிலேயே பொடுகு தொல்லை காண நிவாரணத்தை நாம் உபயோகிக்கலாம். சின்ன வெங்காயத்தை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதை தலையில் தேய்த்தால் போதும். அதன் பின் 30 நிமிடங்கள் கழித்து தலை குளித்து விடவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் நிச்சயமாக பொடுகு பிரச்சனை தீர்ந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.




