தமிழகத்தில் துணை முதலமைச்சர் பொறுப்பில் சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம்…
தமிழகத்தில் துணை முதல்வர் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் உள்ளார் மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது உதயநிதி துணை முதல்வர் ஆன பின் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இது, அரசின் பல்வேறு நிதி சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது, மேலும் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது, இதனை தொடர்ந்து துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எனது கடமைகளை சரிவர செய்வேன் என்றும் மக்களை சென்றடைய வேண்டியது திட்டங்கள் அனைத்து நல உதவிகள் மக்களை விரைவில் சென்றடையும் என்றும் அதற்காக நான் அயராத பாடுபடுவேன் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!!




