தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இல்லத்தில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என மறுத்துள்ள வருமான வரித்துறை, ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது வழக்கமான சரிபார்ப்பு மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.




