Oplus_131072
எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் மாத்திரையா……..
சின்ன தலைவலி, சளி, காய்ச்சல் என்றாலே படக்கென்று பாராசிட்டமால் போட்டுக்கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. உண்மையில் காய்ச்சல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடனே குணப்படுத்த மாத்திரை சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுவது, நாளடைவில் கல்லீரலையும் பாதிக்கும். ஆகவே, மருத்துவர் அனுமதியின்றி இஷ்டப்படி மாத்திரை எடுக்காதீர்கள்… இது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. எந்த வழி வந்தாலும் இந்த மாத்திரையை மட்டும் போட்டால் சரியாகிவிடும் என்ற எண்ணம் நம்மில் விட்டுப் போய் மருத்துவரை அணுகி விட்டு அவருடைய ஆலோசனையின் பேரில் மருந்து மாத்திரைகளை சாப்பிடுங்கள்..



