ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.. இதன் உண்மையான அர்த்தம் என்ன..??
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது ஒரு பழமொழி. இந்த பழமொழி பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் 5 பெற்றால் அரசனும் ஆண்டு என்பது ஐந்து பெண் மக்களை பெறுவதைக் குறிப்பதாக கூறுவார்கள் ஆனால் அது உண்மையல்ல உண்மை என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
ஆடம்பரமாய் வாழும் தாய்
ஒழுக்கமற்ற மனைவி
ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன்பிறந்தோர்
சொல்பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
ஆகிய ஐந்தும் இருந்தால் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை அழிவை நோக்கி போகும் என்பது தான் இதன் உண்மையான அர்த்தம்.




