குடும்பத் தகராறில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி முத்துலட்சுமி (34) என்பவர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதில் தீக்காயத்தால் படுகாயமடைந்து கணவர் பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



