கர்நாடகா: உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த ரக்ஷிதா (23) என்பவர் கார்த்திக் பூஜாரி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரக்ஷிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரக்ஷிதா கார்த்திக்கின் செல்போன் எண்ணை ப்ளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், நேற்று (செப்.12) காலை ரக்ஷிதாவை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து, தப்பியோடிய கார்த்திக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.




