நாம் காலை எழுந்தவுடன் முதலில் குடிப்பது காபியை தான். இதற்கு பல பேர் அடிமையாகவே இருந்து வருகின்றனர். இதைக் குடிப்பதனால் நன்மைகள் பல ஏற்பட்டாலும் தீமைகளும் வருகிறது. அப்படி மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் வெளிவந்த தகவலை இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் உயர் ரத்த அழுத்தம் அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காபி குடிப்பதனால் இதய நோயால் இறக்கும் அபாயம் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகள் காபி குடிப்பதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஜப்பானில் உள்ள தேசிய சுகாதார மருத்துவம் மையத்தின் இயக்குனர் ஹீரோயாசு ஐசோ தனது ஆய்வில் கூறியுள்ளார்.



