ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கியது. தேசிய நெடுஞ்சாலையில், கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



