கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவர் 6 வெற்றிகளுடன் மொத்தம் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். 5 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற கேத்ரினா லாங்கா 2-வது இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக கிராண்ட் ஸ்விஸ் பட்டம் வென்று வைஷாலி அசத்தியுள்ளார்.




