இந்தியாவைச் சேர்ந்த 40 வயது ஐடி ஊழியர் ஒருவர், கடுமையான முதுகுவலி காரணமாக தனது மேலாளருக்கு காலை 8.37 மணிக்கு மருத்துவ விடுப்பு கேட்டு மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், வெறும் 10 நிமிடங்களில், அதாவது காலை 8.47 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து மேலாளர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.




