குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை தொடர்ந்து, அதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி, இன்று (ஆகஸ்ட் 20) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து, மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




