குபேர வழிபாடு – வியாழக்கிழமை அன்று இதை மட்டும் செய்யுங்க போதும்..!! வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்..!!

குபேர வழிபாடு…

வியாழக்கிழமை காலை வீட்டை சுத்தம் செய்து, வாசலில் செம்மண் பட்டை இட்டு அலங்கரித்து, கோலமிட வேண்டும். பச்சரிசி மாவில் அலங்கார கோலம் போட வேண்டும்.

வாசல் நிலைப்படிக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.

எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சள், மற்றொரு பாதியில் குங்குமம் தடவி நிலைப்படியின் இருபுறமும் வைக்க வேண்டும்.

நிலைப்படியின் இருபுறமும் மலர்களை அலங்காரமாக வைக்க வேண்டும்.

குபேர விளக்கு மற்றும் தட்டிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரித்து. தட்டில் பச்சரிசி மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.

விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பச்சை நிற திரி (இல்லையெனில் பஞ்சு திரி) ஏற்ற வேண்டும்.

வீட்டில் எப்போதும் விளக்கேற்றும் பூஜை அறையில் விளக்கேற்றிய பின், குபேர விளக்கிலும் தீபம் ஏற்ற வேண்டும்.

குபேர விளக்கை வீட்டின் நிலை வாசலில் இடது புறம் வடக்கு நோக்கி வைக்கவும்.

தீபம் ஏற்றும் நேரம்:

ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் விளக்கு ஏற்றுவது சிறப்பு.

விளக்கு ஏற்றும் போது குபேர மந்திரத்தை உச்சரிப்பது நல்லது.

குபேர விளக்கை தினமும் ஏற்றி வழிபடலாம். ஆனால் குபேரருக்குரிய வியாழக்கிழமை, மகாலட்சுமிக்கு உரிய மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமை ஆகிய கிழமைகளில் இந்த விளக்கினை ஏற்றுவது மிகவும் விசேஷம்.

குபேரருக்கு உகந்த திசை வடக்கு என்பதால், பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்.

விளக்கில் ஐந்து கற்கண்டு மற்றும் ஒரு ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயம் போட்டு விளக்கேற்றுவதால் பணவரவு அதிகரிக்கும்.

குபேர விளக்கை சுற்றி வாசனை மலர்களை வைக்க வேண்டும்.

பலன்கள்:

தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். செல்வம் பலமடங்கு பெருகும்.

தேவையான பணத்தை சம்பாதிக்க முடியும். சேமித்து வைத்திருக்கும் செல்வம் பாதுகாக்கப்படும். வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்கும். வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்கும் சக்தி கிடைக்கும்.

Read Previous

ஆனந்தமாக இருக்க வழி என்ன தெரியுமா..??

Read Next

குருவிக்கூட்டமும் … மனிதனுக்கு கற்பித்த பாடமும்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular