குழந்தைகளுக்கு இந்த 31 தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம்..!! FSSAI அதிரடி உத்தரவு..!!

குழந்தைகளுக்கு இந்த 31 தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம்: கேரளாவில் உள்ள குடகு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படும் 31 தின்பண்டங்களை தரமற்றதாக இருப்பதாக கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கண்டறிந்துள்ளது.

கேரளா பக்கம் போனால் நம் நினைவுக்கு வருவது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். ஆனால் தற்போது,  சிப்ஸ் பாக்கெட்கள், அல்வா, மசாலா மிக்சர்கள், முறுக்கு மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்டவை FSSAI ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் போது, அசோரூபின், சன்செட் மஞ்சள், அல்லுரா சிவப்பு மற்றும் டார்ட்ராசின் போன்ற செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்பட்டது தெரிந்தது.

அந்த பொருட்கள் அனைத்தும், மங்களூரு, மடிகேரி, தட்சிண கன்னடா, சாமராஜநகர்,  குடகு மற்றும் மைசூர் போன்ற கர்நாடகப் பகுதிகளில் விற்கப்பட்டு வருவதாக தெரிய வந்தது. மேலும் இது போன்ற செயற்கை நிறங்கள் பயன்படுத்துவதன் மூலமாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக படை நோய், ஆஸ்துமா, அனாபிலாக்ஸிஸ் போன்ற ஒவ்வாமை நோய்களும் உண்டாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக விசாரித்து தகவல் அறியுமாறு கேரள அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Read Previous

கிங் விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு?.. திடீர் மருத்துவப் பரிசோதனை..!!

Read Next

நாளை கார்த்திகை 1: ஐயப்பனுக்கு இருமுடி கட்டுவது எப்படி?.. முழு விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular