உ.பி. மாநிலம் ஜான்சியில் பூஜா என்ற இளம்பெண் கணவர் இறந்தவுடன் கொழுந்தனார் கல்யாண் சிங்குடன் உறவில் இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக கல்யாண் உயிரிழந்த பின், அவரது சகோதரன் சந்தோஷுடன் உறவை தொடர்ந்துள்ளார். இந்த உறவுகளுக்கு எதிராக இருந்த மாமியார் சுஷீலா தேவியை, பூஜா தனது சகோதரி மற்றும் காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நில உரிமை மற்றும் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.




